For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்குத் தாவப் போகும் திருச்சி த.மா.கா. மேயர்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

ஜெயலலிதா முதல்வரானவுடன், தமாகாவை சேர்ந்த திருச்சி மேயர் சாருபாலா தொண்டமான் அதிமுகவில்சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக, தமாகா கூட்டணியில் போட்டியிட்டு, திருச்சி மேயராக சாருபாலா பதவியேற்றார். திருச்சி மாநகராட்சியில்26 திமுக கவுன்சிலர்கள் உள்ளனர். அதிமுகவை சேர்ந்தவர்கள் 18 பேர் உள்ளனர். தமாகாவை சேர்ந்தவர்கள்வெறும் 2 பேரே உள்ளனர்.

இதனால் மாநகராட்சியில் எந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாலும் பெரும்பான்மையாக உள்ள திமுகஅல்லது அதிமுகவின் தயவு வேண்டும். ஆனால் சாருபாலா திமுகவின் உதவியை நாட விரும்பவில்லை.

இதனால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் அதிமுகவில் சேர அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அதிமுகவில் சேர்வதற்கு காரணம் ஆளும் கட்சியின் தயவு இருந்தால் தான் திருச்சி மாநகராட்சிக்கு நிதியுதவிகிடைக்கும். அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், மக்களின் நலன் கருதி இந்தமுடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் பற்றி சாருபாலாவிடம் கேட்டபோது, அப்படிப்பட்ட திட்டம் ஏதும் தன்னிடம் இல்லை என்றுமறுத்தார். ஆனால், அதிமுகவில் சேர அவர் திட்டமிட்டிருப்பதை மாவட்ட த.மா.காவினேர ஒப்புக் கொள்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X