கண்டெய்னர் லாரி மோதி 2 போக்குவரத்துப் போலீசார் பலி
சென்னை:
சென்னையில் பைக்கில் சென்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ்காரர்கள் மீது லாரி மோதியதில் 2 போலீசாரும்பலியாயினர்.
எழும்பூர் போக்குவரத்துப் போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் சண்முகம் மற்றும் இளங்கோவன்.
இவர்கள் இருவரும் நேற்றிரவு ரோந்துப் பணியை முடித்துவிட்டு மோட்டர் சைக்களில் அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தனர். எழும்பூர் காவல் நிலையத்தின் அருகே மிக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இந்த மோட்டார்சைக்கிள் மீது பக்கவாட்டில் மோதியது.
மோட்டர் சைக்கிள் சாயந்து லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. இதில் இரு போலீஸ்காரர்களும் லாரியின்சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த லாரி தொடர்ந்து தாறுமாறாக ஓடி சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மீதுமோதியது. இதில் மரமும் உடைந்தது சாய்ந்தது. தொடர்ந்து ஓடிய லாரி ஒரு வீட்டின் சுவரின் மீது மோதி அதையும்உடைத்துத் தள்ளிவிட்டு தான் நின்றது.
இச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் மாநகர காவல்துறை ஆணைர் விஜய்குமார் உடனடியாக அங்குவிரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
கீழ்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிரைவர் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.