பஸ் கட்டண உயர்வு: புதுவையில் பந்த்
பாண்டிச்சேரி:
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று (சனிக்கிழமை) நடத்திய மாநிலம் தழுவிய பந்த்அமைதியாக நடந்தது.
பாண்டிச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதைக் கண்டித்து இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தியது.
இந்த பந்த் தொடர்பாக பாண்டிச்சேரி உட்பட ஆங்காங்கே சிறு சிறு கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. மற்றபடி பெரியகலவரம் எதுவும் நடக்கவில்லை.
இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்கள் உட்பட 420 பேரை போலீசார் கைது செய்தனர்.
பந்த் வெற்றிகரமாக நடந்தது. மக்கள் இந்த பந்துக்கு அளித்துள்ள ஆதரவைப் பார்த்து, அரசு இந்த பஸ் கட்டணஉயர்வை திரும்ப பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தேசிய கவுன்சில் உறுப்பினர் ஆர். ராதாகிருஷ்ணன் ஒருஅறிக்கையில் கூறியுள்ளார்.