குஜராத் கலவரத்தை அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

குஜராத் கலவரத்தை யாரும் அரசியல் ஆக்காதீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

அயோத்தி விவகாரம் தொடர்பாக ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கலவரம்வெடித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நடந்த கலவரத்தில் இதுவரை 427 பேர் கொல்லப்பட்டனர்.

குஜராத்தில் நடந்த வன்முறைக்கு காரணமே குஜராத் அரசு தான் என்று சில எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இந்நிலையில் கும்பகோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் கலவரம் நடந்திருப்பது மிக வேதனையான விஷயம்.ஆனால் இந்தக் கலவரத்தை யாரும் அரசியலாக்காதீர்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் ஒற்றுமையைக் காப்பாற்ற வேண்டும்.

ஆண்டிப்பட்டியில் நடந்த வன்முறைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர திமுக முடிவு செய்துள்ளது என்றுகருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+