திருமணம் செய்யாமலே குடும்பம்: எஸ்.ஐ.- பெண் போலீஸ் சஸ்பெண்ட்
நாகப்பட்டினம்:
திருமணம் செய்யாமலேயே 2 குழந்தைகளை பெற்றுக் கொண்டு சேர்ந்து வாழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், பெண்போலீஸ் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் கிருஷ்ணன் (35). இவரும் நாகப்பட்டினம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த வசந்தகுமாரியும் (30) சென்னை ஆவடிபோலீஸ் பயிற்சி பள்ளியில் ஒரே நேரத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
பயிற்சியின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பயிற்சி முடிந்து பணியில் சேர்ந்த பிறகு இருவரும்திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
இந்த வாழ்க்கையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் பிறந்தது. இந்நிலையில் கிருஷ்ணன் மயிலாடுதுறைபோக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் நாகப்பட்டினம் டி.எஸ்.பி.யை சந்தித்த வசந்தகுமாரி தன் கணவரை மயிலாடுதுறைக்கு மாற்றி விட்டதால்,தன்னையும் அதே ஊருக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதைத் தொடர்நது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வசந்தகுமாரி மாற்றப்பட்டார்.
ஆனால் இவர்கள் இருவரும் கணவன், மனைவி இல்லை என்றும், இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதாகவும்டி.எஸ்.பிக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார்களை விசாரித்த டி.எஸ்.பி. தவறான தகவல் கொடுத்து இடமாற்றம் பெற்றதற்காக கிருஷ்ணன்,வசந்தகுமாரி இருவரையும் சஸ்பெண்டு செய்தார்.












Click it and Unblock the Notifications