மதுரையில் ஆள்மாறாட்டம் செய்த பிளஸ் 2 மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் திங்கள்கிழமை நடந்த பிளஸ் 2 தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவன் கைதுசெய்யப்பட்டான்.

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 54 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் மாணவர்களைவிட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்வெழுதினர். மதுரையில் 17 பார்வையற்றமாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். சிறப்பு பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருமையமாக சென்று பார்வையிட்டனர்.

அப்போது மதுரையில் உள்ள திருமங்கலத்தில் ஒரு மாணவனுக்கு பதில், வேறு ஒரு மாணவன் ஆள்மாறாட்டம்செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் காப்பி...

இதே போல் விழுப்புரத்தில் காப்பியடித்ததாக 5 மாணவர்களை பிடிபட்டனர். அவர்களின் விடைத்தாள்களைபறிமுதல் செய்து, விடைத்தாள்களை கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இன்னும் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+