For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14-ஐ மானபங்கம் செய்ய முயன்ற 19

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிய 14 வயது சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக 19 வயது சிறுவனைபோலீஸார் கைது செய்தனர்.

சென்னை பிளாட்பாரங்கள் ஏழை மக்களின் குடியிருப்புகளாகவும் செயல்படுகின்றன. இரவு நேரங்களில் சென்னை நகரபிளாட்பாரங்களில் படுத்துத் தூங்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

கொண்டித்தோப்பு பகுதியிலும் இதுபோல பிளாட்பார வாசிகள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதி பிளாட்பாரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவர் ஒரு ரிக்ஷா தொழிலாளி. இரவு நேரங்களில் தனது மனைவி,மகள் (14 வயது) ஆகியோருடன் பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்குவது வழக்கம்.

வழக்கம் போல, படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிளாட்பாரவாசியான குமார் (19)இவரது மகளை நெருங்கி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது ஜேசுராஜின் மகள் கூக்குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்துகுமாரைப் பிடித்து நையப்புடைத்தனர்.

பின்னர் அவரை ஏழுகிணறு பகுதி போலீஸில் ஒப்படைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X