கலைக் கல்லூரிகளிலும் இனி +2 சான்றிதழ் சோதனை
சென்னை:
கலைக்கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பள்ஸ் 2 சான்றிதழ்களும் இனி பரிசோதிக்கப்படும் என்றுகல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இதுவரை மருத்துவம், இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பிளஸ் டூ சான்றிதழ்கள் தான்பரிசோதிக்கப்பட்டு வந்தன. மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும்.மாணவரின் சான்றிதழ் உண்மையானதே என இயக்குனக் அலுவலகம் ஓ.கே. செய்தால் தான் தொடர்ந்துகல்லூரியில் படிக்க முடியும்.
இந்த முறை இனி கலைக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இது குறித்து தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:
தொழிற்படிப்புகளில் மாணவர்கள் சேரும் போது அவர்களது ப்ளஸ் 2 சான்றிதழ்களை அரசு தேர்வுகள் இயக்கம்சரிபார்க்கிறது.
அதே போல் கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் சான்றிதழ்களும் இனி பரிசோதிக்கப்படும்.போலி சான்றிதழ்களைத் தடுக்கவே இம்முறை அறிமுகமாகிறது.
இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதுபவர்கள் இம்முறை மட்டுமே குறிப்பிட்ட பாடங்களில் தேர்வு எழுத முடியும். வரும்செப்டம்பர் மாதம் முதல் அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும்.
கடந்த முறை தொழிற்படிப்புகளில் சேர்ந்தோரில் 52 சதவீதத்தினர் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதியவர்கள் என்றுதம்பிதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications