பெண் போலீஸை டீஸ் செய்த வாலிபருக்கு தர்ம அடி
சென்னை:
பெண் போலீஸை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று கேலி செய்த வாலிபரை பொதுமக்கள் உதவியுடன்பிடித்து போலீஸில் ஒப்படைத்தார் அந்த பெண் போலீஸ்.
தாம்பரம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருப்பவர் ஜானகி. இவர்குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை பணி முடிந்ததும், தாம்பரம் பஸ் நிலையத்திற்கு பஸ்ஏறுவதற்காக வந்துள்ளார். அப்போது அவர் யூனிபார்மில் இல்லை.
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் வாலிபர் ஜானகி அருகில் வந்து ஒரு ரவுண்ட் அடித்துலுக் விட்டார். பிறகு ஏதோ கமெண்ட் அடித்துள்ளார். இந்த நிலையில் ஜானகி செல்ல வேண்டிய பஸ் வந்துவிட்டது. இதையடுத்து ஜானகி பஸ்சில் ஏறினார்.
பைக் வாலிபர் விடவில்லை. ஜானகி ஏறிய பஸ்சை பின் தொடர்ந்து சென்றார். பஸ் குரோம்பேட்டையில் நின்றது.பஸ்சிலிருந்து இறங்கினார் ஜானகி. பைக் வாலிபரும் ஜானகி அருகே வந்து சில்மிஷம் செய்தார்.
உடனே ஜானகி, பைக் வாலிபரின் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு குரல் எழுப்பினார். இதைப் பார்த்தஅங்கிருந்த பொதுமக்கள் ஜானகிக்கு உதவியாக ஓடி வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து அவனைநையப்புடைத்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications