மக்கள் குறைதீர்க்கும் அலுவலகம் திறக்கிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான திமுக தலைவர் கருணாநிதி தனது தொகுதி மக்களின் குறைகளைக்கேட்பதற்காக அந்தப் பகுதியில் ஒரு அலுவலத்தைத் திறக்கிறார். வரும் 7ம் தேதி இந்த எம்.எல்.ஏ. அலுவலகம்திறக்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருணாநிதி. தமிழகத்தில் உள்ள மிகச் சிறியதொகுதிகளில் ஒன்று சேப்பாக்கம் தொகுதி. இங்கு வெற்றி பெற்ற கருணாநிதி இதுவரை ஒரு முறை கூட சட்டசபைக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் அறைக்குச் சென்றுதான் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் கருணாநிதி மீது பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதி மக்களை கருணாநிதிமதிக்கவில்லை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, தொகுதி மக்களை ஏமாற்றும் விதத்தில்சட்டசபைக்கு வருவதையே புறக்கணிக்கிறார். இதுதான் அவர் தொகுதி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையாஎன்று அந்தத் தொகுதியில் பிற கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து 3 முறை ஒரு எம்.எல்.ஏ சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாவிட்டால் (குறைந்தபட்சம்கையெழுத்துக் கூட போடாவிட்டால்) அவரது பதவி பறிபோய்விடும்.

எனவே கருணாநிதி வரும் கூட்டத் தொடரிலாவது கலந்து கொண்டாக வேண்டும். அட்லீஸ்ட் சட்டசபைக்கு வந்துஎம்.எல்.ஏக்கள் ரிஜிஸ்டரில் கையெழுத்தாவது போட வேண்டும்.

இந் நிலையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே எம்.எல்.ஏ அலுவலகத்தை கருணாநிதி திறந்துவைக்க இருக்கிறார். தொகுதி மக்களின் குறைகள், மனுக்கள் ஆகியவற்றைப் பெற இந்த அலுவலகம்பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. தேர்தல் முடிந்து பல மாதங்கள் கழிந்த நிலையில் தொகுதி அலுவலகம்திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அலுவலகத் திறப்புக்கான ஏற்பாடுகளை சேப்பாக்கம் திமுக செயலாளர் சுரேஷ் குமார் செய்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+