மாணவர்கள் மோதல்: துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கோஷ்டி மோதலில் சக மாணவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சேலம் சட்டக்கல்லூரி மாணவரை போலீசார்கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தை சேர்ந்த வீரபத்ரனின் மகன் மாரிதுரை. இவர் சேலத்தில் உள்ள தனியார்சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

மாரிதுரையும், அவருடன் படிக்கும் மாணவர்களும் சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு மது அருந்தசென்றுள்ளனர். அங்கு மது குடித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால்,தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சிவராமகிருஷ்ணன் என்ற மாணவரை சுட்டு விடுவேன் எனமாரிதுரை மிரட்டியிருக்கிறார்.

பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. வழக்கம் போல் மீண்டும்துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்து போன சிவராமகிருஷ்ணன் கன்னங்குறிச்சிபோலீசாரிடம் இது குறித்து புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக மாரிதுரை தங்கியிருந்த கல்லூரி விடுதிக்கு சென்று அவரைக் கைது செய்தனர்.அவர் சட்டைப் பைக்குள் வைத்திருந்த துப்பாக்கி மட்டும், 4 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாரிதுரை மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+