அம்மாவுக்காக ஒரு பக்தன் பகீர் "காணிக்கை"
சிதம்பரம்:
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஒரு அதிமுக தொண்டர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதையடுத்துதனது நாக்கை வெட்டிக் கொண்டார்.
இந்தப் பயங்கரமான "பக்தி"ச் சம்பவம் சீர்காழியில் நடந்துள்ளது. சீர்காழியைச் சேர்ந்தவர் ராஜா. தீவிர அதிமுகதொண்டர், அதுமட்டுமல்லாது ஜெயலலிதா என்றால் ராஜாவுக்கு உயிர். அவருக்காக எதையும் செய்யும் மன நிலைகொண்டவர். சீர்காழியில் சாதாரண டீக்கடை வைத்துள்ளார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனால் திருப்பதி வந்து மொட்டை போடுவதாக அவர் வேண்டியிருந்தார்.அதுமட்டுமல்லாது இன்னொரு பகீர் வேண்டுதலையும் வைத்திருந்தார்.
கடந்த 2ம் தேதி ஜெயலலிதா பதவியேற்றதைக் காண 1ம் தேதியே சென்னை வந்தார் ராஜா. ஜெயலலிதாபதவியேற்பு நிகழ்ச்சியை பார்த்த அவர் மன திருப்தியுடன் திருப்பதி சென்றார்.
அங்கு முதலில் மொட்டை போட்டார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டினார்.பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அதை உண்டியலில் போட்டார்.
இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் பயந்து போய் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் ராஜா, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் முழு நாக்கையும் வெட்ட முயன்றுள்ளார்.
ஆனால் கடைசி நேரத்தில் அதை கைவிட்டார். அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள் சுதாரித்துக் கொண்டு ராஜாவைமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜாவால் இனி பேச முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். சிகிச்சைக்குப் பின் ஊர் திரும்பினார் ராஜா. அவரை சிதம்பரம் எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவினர்நேரில் சென்று பார்த்தனர். ஒரு பேப்பரில், தான் ஏன் நாக்கை வெட்டினேன் என்பதற்கான காரணத்தை எழுதி வைத்துள்ளார் ராஜா.
அதில் அம்மாவுக்காக நான் எதையும் செய்வேன். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு முடி காணிக்கையுடன்,நாக்கையும் காணிக்கை செய்வதாக வேண்டியிருந்தேன். எனது கோரிக்கை நிறைவேறியது. எனவே நானும் எனது காணிக்கையை நிறைவேற்றி விட்டேன் என்று எழுதியுள்ளார்.
இந்த "பக்தன்" காணிக்கையை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications