நெய்வேலியில் பொறியாளர்கள் ஸ்டிரைக்: தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிலைய (என்.எல்.சி.) பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஒட்டுமொத்த விடுப்புபோராட்டத்தை மேற்கொண்டிருப்பதையடுத்து, மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அனல்மின் நிலையத்தை தனியார் மயமாக்கலை எதிர்த்தும், பதவி உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும்,என்.எல்.சி. பங்குகள் விற்கப்படுவதைக் கண்டித்தும் சுமார் 5,000 பொறியாளர்களும் 1,000 அதிகாரிகளும் இந்தவிடுப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் என்.எல்.சியின் 2 மின் உற்பத்தி நிலையங்களிலும் இன்று இரவுக்குள் மின் உற்பத்தி முழுவதுமாகக்குறைந்துவிடும் என்று கருதப்படுகிறது.
என்.எல்.சி. பொறியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தால் மின் உற்பத்திமுழுவதுமாகப் பாதிக்கப்பட்டு, தமிழகமே இருளில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே என்.எல்.சி. பொறியாளர்களும் அதிகாரிகளும் இன்று (திங்கள்கிழமை) உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை அதிகரிக்கஅந்நிறுவனம் முடிவு செய்திருப்பதைக் கண்டித்து, அந்நகரில் உள்ள கடை மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் இன்றுகடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications