காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்:

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள், சிங்கள மீனவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கனகராஜ் உள்ளிட்ட 6 பேர் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்ககடலுக்குள் சென்றனர்.

கோடியக்கரை அருகே இந்தியப் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள மீனவர்கள் அங்குஏராளமான பேர் வந்தனர்.

இந்திய எல்லைக்குள் புகுந்த சிங்கள மீனவர்கள், அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதுகடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். பயங்கர ஆயுதங்களை வைத்து அவர்கள் தமிழக மீனவர்களைத்தாக்கினர்.

பின்னர் தமிழக மீனவர்களின் படகில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள என்ஜினையும் திருடிக் கொண்டு சிங்களமீனவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். படகிலிருந்து என்ஜினை சிங்கள மீனவர்கள் கழற்றிச் சென்று விட்டதால்6 பேரும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஒரு மீன்பிடி படகு வரவே தங்களது வேட்டிகளை கழற்றி அதை காற்றில் அசைத்து,மீன் பிடிப் படகை வரவழைத்து அதில் ஏறி தமிழக மீனவர்கள் காரைக்கால் வந்து சேர்ந்தனர்.

இந்தச் சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+