திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழக ஆளுநர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் தனது மனைவியுடன் இன்று(செவ்வாய்க்கிழமை) சிறப்பு தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் ராவ்,செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் வந்தார்.
அங்குள்ள புகழ் பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்று அவரும், அவரது மனைவி உமா ராவும் வழிபட்டனர்.
பிற்பகலில் இருவரும் தூத்துக்குடி அருகே உள்ள புகழ் பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றுவழிபடுகின்றனர். சிறந்த கலை நுட்பம் கொண்ட சிற்பங்களைக் கொண்டது இக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இன்று இரவு திருநெல்வேலி செல்லும் ஆளுநரும் அவருடைய மனைவியும் அங்கு தங்குகின்றனர்.
அதன் பின்னர் புதன்கிழமை காலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்புவிழாவில் ஆளுநர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications