கொளத்தூர் மணி எங்கே? - உயர் நீதிமன்றத்தில் சகோதரர் மனு
சென்னை:
கர்நாடக அதிரடிப்படை போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை கோர்ட்டில்ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர் மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் மணியின் சகோதரர் பழனிச்சாமி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தன் மனுவில்கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர் கொளத்தூர் மணி.
அவரை கர்நாடக அதிரடிப்படை டி.எஸ்.பி. சென்ன மல்லப்பன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் கடந்த 8ம்தேதி மேட்டூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் புகுந்து மாலை 3.30 மணியளவில் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
தற்போது அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எனவே மணியை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும்.
மேலும் மணியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று பழனிச்சாமி அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, ஞானபிரகாசம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அதிரடிப்படைசேலம் எஸ்.பி, மேட்டூர் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அவர்கள் வரும்14ம் தேதிக்குள் பதில் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications