சென்னை சிவா-விஷ்ணு கோவிலில் திடீர் தீ
சென்னை:
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பிரபலமான சிவா-விஷ்ணு கோவிலில் தீவிபத்து ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோவிலுக்கும் சேதம் ஏற்படவில்லை.
தி. நகர் பஸ் நிலையம அருகில் உள்ளது சிவா-விஷ்ணு கோவில். இங்கு சிவனும், விஷ்ணுவும் ஒரே ஆலயத்தில்உள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது.அங்கு உபன்யாசம் உள்ளிட்டவை நடந்து வந்தன.
இந்நிலையில் இந்தப் பந்தலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.
தீயும் உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, கோவிலிலும் சேதம்ஏற்படவில்லை.
கடும் வெயில் காரணமாக பந்தல் தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. தீவிபத்து குறித்து அறிந்ததும்,சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் விரைந்து வந்து பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications