நிலம் அபகரிப்பு: முத்துக்கருப்பன் மீது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அண்ணா நகரில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக சென்னை மாநகர முன்னாள்போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரஉத்தரவிடுமாறு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சில்வின் காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனதுமனுவில் கூறியுள்ளதாவது:

திருச்சி ஆயுதப் படை ஐஜியாக உள்ள முத்துக்கருப்பன் சென்னை கமிஷனராக இருந்தபோது, அண்ணா நகரில்உள்ள எனக்குச் சொந்தமான நலத்தை அபகரித்துக் கொண்டார். அதன் மதிப்பு ரூ.1.5 கோடியாகும்.

இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் புகாரை ஏற்க ஊழல் தடுப்புத் துறைமறுத்து விட்டது.

எனவே எனது புகாரை ஏற்று, முத்துக்கருப்பன் மீது வழக்குத் தொடர உத்தரவிட வேண்டும் என்று தன் மனுவில்சண்முகம் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு நீதிபதி அசோக்குமார் ஒத்திவைத்தார்.

சண்முகம் வாங்கிய அண்ணா நகர் நிலம், மேயர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரமேஷுக்குச்சொந்தமானது. இந்த ரமேஷ், தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகம் தொடர்ந்து தனது மனுவில் கூறுகையில், ரமேஷிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியதைத் தெரிந்துகொண்ட முத்துக்கருப்பன், அந்த நிலத்தை இரண்டு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து மிரட்டி, அபகரித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அபகரிப்பு நடந்தது. இதுதொடர்பாக மார்ச் 5ம் தேதி ஊழல் தடுப்புப்போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய அவர்கள் மறுத்து விட்டனர் என்றுசண்முகம் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+