வாக்கு வங்கி அரசியலால்தான் பேச்சு தோல்வி: காஞ்சி சுவாமிகள்
காஞ்சிபுரம்:
வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே அயோத்தி விவகாரத்தில் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைதோல்வியடைந்து விட்டது என்று காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் இன்று (வெள்ளிக்கிழமை)கூறினார்.
தமிழக முஸ்லீம் மக்கள் இயக்கத்தினர் இன்று காஞ்சிபுரம் சென்று, அயோத்தி விவகாரத்தில் சமரசம் செய்ததற்காகசுவாமிகளைப் பாராட்டினர். அப்போது அவர் பேசியதாவது:
அயோத்திப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று என்னால் முடிந்த அளவு முயற்சித்தேன். ஆனால்அப்போது காலம் கடந்து விட்டது.
தற்போதைய அரசியல் வெறும் வாக்கு வங்கி அரசியலாகத்தான் உள்ளது. இதனால் என்னுடைய அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அயோத்தியில் யாருக்கு வெற்றி கிடைத்தது, தோல்வி கிடைத்தது என்றெல்லாம் யாரும் பார்க்காதீர்கள்.அயோத்தியில் நடக்கும் நியாய, அநியாயங்களைக் கண்டுகொள்வதற்கு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இதுஒரு நல்ல வாய்ப்பு. அதனால் அமைதியாக இருந்து நடப்பவற்றைக் கவனியுங்கள்.
அயோத்தியில் அமைதி ஏற்படுவதற்கான காலம் கனிந்து வரும். வரும் புத்தாண்டு மக்கள் மத்தியில்அமைதியையும் அன்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றார் காஞ்சி சுவாமிகள்.












Click it and Unblock the Notifications