கடைசி நிமிடம் வரை குழப்பம்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக கோவிலுக்குச் செல்லும வழியில் ஏதாவதுஒரு இடத்தில் தூண் அல்லது சிலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என பா.ஜ.க. எம்.பியும் பஜ்ரங் தள் அமைப்பின்தலைவருமான வினய் கத்யார் கூறினார்.

இன்று பிற்பகலில் இந்த சிலை வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர்ராமசந்திரதாஸ் பரமஹம்ஸ் கூறியுள்ளார். ஆனால், எந்த இடம் என்பதை அவர் கூறாதததால் போலீசாரும்பாதுகாப்புக்கு வந்துள்ள மத்தியப் படையினரும் குழம்பிப் போய் உள்ளனர்.

இந் நிலையில் இன்று காலை அயோத்தியில் பரமஹம்ஸ், வினய் கத்யார், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கல் ஆகியோர் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கத்யார்,

கோவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடத்துக்குச் செல்லும வழியில் ஏதாவது ஓரிடத்தில் தான் இந்த சிலை அல்லதுதூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என்றார்.

இதனால் கடைசி நிமிடம் வரை குழப்பம் நீடிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையயே இந்த சிலை தான நிகழ்ச்சி பயம் குஜராத் முழுவதும் பரவியுள்ளது. இங்கு கடந்த வாரம் தான்பெரும் கலவரத்தில் 650 பேர் எரித்தும், அடித்தும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். இப்போது இந்தநிகழ்ச்சியை முன்வைத்து ஏதாவது வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் பரவியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+