ஹைதர் அலி சென்னை சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
மதுரை அருகே தப்பித்து பின்னர் போலீசாரிடம் சிக்கிய அல்-உம்மா கைதியான ஹைதர் அலி,பாளையங்கோட்டை சிறையிலிருந்து சென்னை சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.
கடந்த 7ம் தேதி போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய ஹைதர் அலி, அடுத்த இரண்டு நாட்களிலேயே சிவகங்கையில்பிடிபட்டான்.
பின்னர் நேற்று திருமங்கலம் நீதிமன்றத்தில் ஹைதர் அலி ஆஜர்படுத்தப்பட்டான். போலீசார் விசாரணைக்கு அவன்ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததையடுத்து, அவனை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க வேண்டும் என்றுநீதிபதி வெங்கடாஜலபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் ஹைதர் அலி அடைக்கப்பட்டான்.
போலீசாரின் விசாரணைக்கு அவன் ஒத்துழைப்பு கொடுத்த மறுத்து வருவதையடுத்து, பாதுகாப்புகாரணங்களுக்காக ஹைதர் அலி சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான்.












Click it and Unblock the Notifications