அயோத்தி: தினமும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
லக்னோ:
அயோத்தி நில விவகாரம் குறித்து தினமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மார்ச் 15ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று விஸ்வ ஹிந்துபரிஷத்தினர் அறிவித்ததைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 58கரசேவகர்கள் எரிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறையில் 650க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்து, தினமும் இந்த வழக்கு குறித்துவிரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஒரு மனுவை அலாகாபாத்தில் உள்ள லக்னோ நீதிமன்றத்தில்தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுதிர் நாராயண், எஸ்.ஆர். அலாம், பன்வார்சிங் ஆகியோர் முன் இன்றுவிசாரணைக்கு வந்தது.
லக்னோ உயர் நீதிமன்ற பெஞ்ச் அல்லது கமிஷன் மூலமாகவோ தினமும் விசாரணை செய்து வழக்கை விரைவில்முடிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அயோத்தி விவகாரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை விரைவில்முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.லக்னோ:
அயோத்தி நில விவகாரம் குறித்து தினமும் விசாரணை நடத்த வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 40 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மார்ச் 15ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்று விஸ்வ ஹிந்துபரிஷத்தினர் அறிவித்ததைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 58கரசேவகர்கள் எரிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த வன்முறையில் 650க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காண மத்திய அரசு முடிவு செய்து, தினமும் இந்த வழக்கு குறித்துவிரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஒரு மனுவை அலாகாபாத்தில் உள்ள லக்னோ நீதிமன்றத்தில்தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுதிர் நாராயண், எஸ்.ஆர். அலாம், பன்வார்சிங் ஆகியோர் முன் இன்றுவிசாரணைக்கு வந்தது.
லக்னோ உயர் நீதிமன்ற பெஞ்ச் அல்லது கமிஷன் மூலமாகவோ தினமும் விசாரணை செய்து வழக்கை விரைவில்முடிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து அயோத்தி விவகாரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை விரைவில்முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications