ஜெ. நடத்துவது சர்வாதிகார ஆட்சி: இளங்கோவன்
சென்னை:
ஜெயலலிதா ஆட்சி நடத்துவது சர்வாதிகார ஆட்சி போல் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் வீடுகளில் அதிரடியாகசோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் மக்களவையிலும் வெடித்தது. மேலும் திமுகவைச் சேர்ந்த முக்கியதலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து இன்று (புதன்கிழமை) சென்னையில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவின் முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவது தவறான செயல். இதுகண்டிக்கத்தக்கது.
அதே போல் சட்டசபையில் தன்னை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக அன்று மாலையே முன்னாள் திமுகஅமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள்.
இதெல்லாம் ஜனநாயகத்துக்கு விரோதமானது. இவர்கள் ஆட்சியை நடத்துவதை பார்த்தால் சர்வாதிகார ஆட்சிபோல் இருக்கிறது.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்போது, அரசியல்வாதிகளை பழிவாங்கும்நடவடிக்கையிலேயே ஜெயலலிதா இருக்கிறார்.
இதனை மற்ற கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களும் விரும்ப மாட்டார்கள் என்று இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications