"இந்தியா-பாக். அணு ஆயுத போர் அபாயம் அதிகரிப்பு"
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம், பெரும் அணு ஆயுதப் போராகவெடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கடந்த 1971லிருந்து நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, தற்போது போர் ஏற்படுவதற்கான சூழல்அதிகரித்துள்ளது என்று சி.ஐ.ஏ. அமைப்பின் இயக்குநரான ஜார்ஜ் டெனட் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும். இதற்குப் பாகிஸ்தானும் பதிலடிகொடுக்கும் என்பதால், இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறுவதற்கான வாய்ப்புக்களும் பல மடங்குஅதிகரித்துள்ளது என்றும் டெனட் கூறினார்.
மேலும் அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணை முழுமையாகப் பரிசோதனைசெய்யாமலேயே இரு நாடுகளும் அவற்றை எல்லையில் குவிக்கலாம் என்றும் டெனட் அச்சம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட டெனட்,இதனால் அந்த இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்றும்கூறினார்.












Click it and Unblock the Notifications