குஜராத்தில் அமைதி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

2வது முறையாக வன்முறை தாண்டவமாடிய குஜராத் மாநிலத்தில் நேற்று (புதன்கிழமை) இரவிலிருந்து அமைதிநிலவுகிறது.

குஜராத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடந்த வன்முறையில் 650பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி மீண்டும் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் நேற்றிரவிலிருந்து எந்த வன்முறையும் இல்லாமல் குஜராத் அமைதியாக இருப்பதாக போலீஸ்அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் உள்ள மொடாசா மற்றும் ஹிமத்நகரில் ஊரடங்கு தொடர்ந்து அமலில்உள்ளது.

பரூச்சா மற்றும் பரோடா நகரங்களில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. அகமதாபாத்திலும் வன்முறை எதுவும்நடக்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையில் மொடாசா, பரோடா, ஹிமத்நகர் ஆகிய பகுதிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

குஜராத்தில் அமைதி திரும்பியதாக சொல்லப்பட்டாலும், வன்முறையால் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டுமுகாம்களில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்கியிருக்கிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் மீண்டும் பதற்றம்:

இதற்கிடையே பெங்களூர்-ஜெகஜீவன்ராம் நகரில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 16) ஏற்பட்ட திடீர் கலவரத்தில்கத்தியால் குத்தப்பட்டவர் நேற்று இறந்ததால், மீண்டும் அங்கு பதட்டம் உருவாகியுள்ளது.

கத்திக் குத்துப்பட்ட நாகராஜ் (55), ஜான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் நேற்று காலை 11.30 மணி அளவில் இறந்தார்.

நாகராஜ் இறந்த செய்தியால் ஜெகஜீவன்ராம் நகரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து ஜெகஜீவன்ராம் நகரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதற்றத்தைத் தணிக்கபெங்களூர் நகர கமிஷனர் சாங்கிலியானா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+