சென்னை சிறையில் அல் உம்மா கைதிகள் வன்முறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா கைதிகள், சிறை நிர்வாகத்தை எதிர்த்து நேற்று(புதன்கிழமை) சிறைக்குள்ளேயே திடீர் வன்முறையில் இறங்கினர்.

சென்னை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ள அல் உம்மா கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இதேபோல அடைக்கப்பட்டிருந்த ஹைதர் அலி மற்றும் இமாம் அலி ஆகியோரை மதுரைக்கு கொண்டுசென்றபோது தப்பிவிட்டனர்.

பின்னர் ஹைதர் அலி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தையடுத்து சென்னை சிறையில்உள்ள முஸ்லீம் கைதிகள் குறிப்பாக அல் உம்மா கைதிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஹைதர் அலி சென்னை சிறைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன். இதையடுத்து அல் உம்மாகைதிகள் இருந்த அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டன. அங்கு பலத்த காவல் போடப்பட்டது.

கைதிகள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜா உசேன்என்ற கைதி தலைமையில் அல் உம்மா கைதிகள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தங்களது சிறை கதவுகளை திறந்து கொண்டு வெளியே வந்த அவர்கள் ஒரு வார்டனைக் கீழே தள்ளி உதைத்தனர்.பின்னர் சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து மற்ற பகுதிகளில் இருந்த வார்டன்கள், துணை ஜெயிலர் உள்ளிட்டோர் விரைந்து வந்து லேசானதடியடி நடத்தி அல் உம்மா கைதிகளை அடக்கினர். அதன் பிறகு கைதிகள் அனைவரும் அவரவர் செல்களில்அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+