ஓடும் ரயிலில் பள்ளி மாணவி கற்பழித்து கொலை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ஓடும் ரயிலில் பள்ளி மாணவியைக் கற்பழித்து விட்டு, கழுத்தை அறுத்து கொலையும் செய்துதப்பியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தணிக்கலாம்பட்டு காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம்என்பவரின் மகள் சங்கீதா (15). இவர் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்தார்.

நேற்று காலை காட்பாடி "பாசஞ்சர்" ரயிலில் சங்கீதா பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்சென்ற ரயில் பெட்டியில் இருந்த சில வாலிபர்கள், திடீரென்று அவரைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்குச்சென்றனர்.

அங்கு சங்கீதாவை நிர்வாணமாக்கிய அந்த வாலிபர்கள், அவரைக் கதறக் கதறக் கற்பழித்துள்ளனர். பின்னர்சங்கீதாவின் கழுத்தை அறுத்து கொலையும் செய்துவிட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.

அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், ரயில்வே போலீசார் வழக்கம்போல சோதனைசெய்துள்ளனர். அப்போது கழிவறைக்குள் நிர்வாணக் கோலத்தில் சங்கீதா கிடப்பதைப் பார்த்து போலீசார்அதிர்ந்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த விழுப்புரம் போலீசார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர்.

சங்கீதாவைக் கற்பழித்துக் கொலை செய்த வாலிபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+