"தமாகாவிலிருந்து குமாரதாஸை நீக்கியது தவறு"
சென்னை:
கட்சி நலனுக்காக குரல் கொடுத்த குமாரதாஸை கட்சியை விட்டு நீக்கியது தவறு என்ற தமாகா எம்.எல்.ஏ. ஹக்கீம்கூறினார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாதாகக் கூறி கிள்ளியூர் தொகுதி தமாகா எம்.எல்.ஏ., குமாரதாஸைஅக்கட்சியின் தலைவர் வாசன் அதிரடியாக நீக்கினார்.
ஆனால் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஜெயந்தி நடராஜன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றகேள்வி அக்கட்சியனரிடேயே கேள்வி எழுந்துள்ளது.
இதேப் போல் காங்கிரசுடன் தமாகா எக்காரணம் கொண்டும் இணையக் கூடாது என்று பகிரங்கமாக கூறி வருபவர்மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ஹக்கீம். ஆனால் இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் குமாரதாஸ் நீக்கப்பட்டதற்கு ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் ஹக்கீம்கூறியதாவது:
மூப்பனாருக்கு மன உளைச்சல் கொடுத்தவர்கள் காங்கிரஸில் உள்ளனர். அதனால் தான் குமாரதாஸ் போன்றவர்கள்காங்கிரசுடன் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை உணராத கட்சி தலைமை குமாரதாஸை நீக்கியது தேவையற்றது. எனவே இதை பரிசீலனை செய்யவேண்டும். திங்கள்கிழமை நான் தலைவர் வாசனை சந்தித்து இது குறித்து பேச உள்ளேன்.
மறைந்த தலைவர் மூப்பனார் மீது எப்படி மரியாதையும், பக்தியும் வைத்திருந்தேனோ, அதே போல் வாசன் மீதும்பக்தியும், பாசமும் வைத்துள்ளேன். அவருக்காக போராடும் ஜீவன் நான் என்று ஹக்கீம் கூறினார்.












Click it and Unblock the Notifications