ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசு பரிசீலனை
சென்னை:
தமிழகத்தில் பெருகி வரும் சாலை விபத்துக்களைத் தடுக்க ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள்கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்துவருகிறது.
சமீபகாலமாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்புக் குறித்துஅரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர் சாலை விபத்துக்கு என்ன காரணம்? விபத்துக்களை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?இவை குறித்து, அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிக வேகத்தில் ஓட்டுவது, மிகப் பழைய வாகனங்கள், இரவில் களைப்போடு, தூக்க கலக்கத்தோடு ஓட்டுவது,சாலை விதிகளை மீறல் , வழுக்கலான டயர்களோடு வாகனத்தை ஓட்டுதல் போன்ற பல காரணங்கள் விபத்துக்கானகாரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த காரணங்களை எல்லாம் நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஸ்கூட்டர்,மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகும் போது பெரும்பாலும் தலையில் அடிப்பட்டேஇறக்கிறார்கள்.
இதனால் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்கலாமா என்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது.
சாலை விபத்துக்களைத் தடுக்கும் புதிய அறிவுப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான புதியஅறிவிப்புகளை பட்ஜெட்டில் அல்லது போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில், ஜெயலலிதா அறிவிப்பார்என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications