திமுக-பாஜக மோதல்: கருணாநிதியை சந்திக்க மாட்டேன் - ஜனா
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு முறிந்தது என்று அறிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துஇப்பிரச்சனை தொடர்பாகப் பேசப் போவதில்லை என்று பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி கூறினார்.
பாஜக உறவு முறிந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது குறித்து சென்னையில் தமிழக பாஜகநிர்வாகிகள் கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்தக் கூட்டம் தொடங்கியது. இதில் அகில இந்திய பாஜக துணைத் தலைவர்ராமாராவ், பொருளாளர் சுகுமாரன் நம்பியார் மற்றும் மாநிலத் தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலாளர்கள் இல.கணேசன், ராஜா, சட்டமன்ற பாஜக தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திமுகவுடனான உறவை முறித்துக் கொள்வதால் கட்சிக்கு பாதிப்பில்லை என்ற ரீதியில் அதிமுக ஆதரவு பாஜகநிர்வாகிகள் பலர் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதேசமயத்தில் திமுக நம்மைக் கைதூக்கி விட்ட கட்சி. அதைப் பகைத்துக் கொள்வது தவறு என்ற ரீதியில் இல.கணேசன் உள்ளிட்ட சிலர் பேசியதாகவும் தெரிகிறது.
பின்னர் நேற்றிரவு சென்னை வந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, இன்று தமிழகத்தில் உள்ள மூத்த பாஜக தலைவர்களைச்சந்தித்துப் பேசவுள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்தும், திமுக-பாஜக மோதல் குறித்தும் ஜனாவிடம் கட்சிநர்வாகிகள் விளக்கம் அளிக்கவுள்ளனர். அதன் பிறகே திமுகவுடனான உறவு குறித்து பாஜக இறுதி முடிவைஎடுக்கும் என்று தெரிகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக கருணாநிதியைச் சந்திக்கப் போவதில்லை என்று ஜனா கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications