"பொடோ": ஓரணியில் திரண்ட திமுக, அதிமுக
டெல்லி:
பொடோ சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் திமுகவும், அதிமுகவும் முதல் முறையாக ஒரே நேரத்தில்மத்திய அரசுக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டனர்.
பொடோ சட்டம் மக்களவையில் நிறைவேறி, மாநிலங்களவையில் நிறைவேறாமல் போனதால் நேற்று(செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொடோ சட்டத்தின் மீதானவிவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது.
இந்த ஓட்டெடுப்பில் "பொடோ"வுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் 12 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 11எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
பொதுவாக மாநிலங்களில் ஆளுங்கட்சி ஆதரவாக வாக்களித்தால், எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களிக்கும்.
ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும்(மத்தியில் ஆளுங்கட்சி கூட்டணியில் திமுகவும் எதிர்க்கட்சியில் அதிமுகவும் உள்ளன) பொடோ சட்டத்தைஆதரித்து வாக்களித்தது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.












Click it and Unblock the Notifications