சீனாவில் ஜஸ்வந்த் சிங்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஐந்து நாள் பயணமாக இன்று காலை சீனாவுக்குப் போய்ச் சேர்ந்தார்.
பெய்ஜிங்கிற்கும் டெல்லிக்கும் இடையே முதன் முதலாகப் பறந்த நேரடி விமானத்தில்தான் ஜஸ்வந்த் சிங் அங்குசென்று சேர்ந்தார்.
பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சனைகள் முதல் இந்தோ-சீனா உறவுகள் வரை பல்வேறு தரப்பிலானபேச்சுவார்த்தைகளை ஜஸ்வந்த் சிங் சீன தலைவர்களுடன் பேசவுள்ளார்.
சீனப் பிரதமரான சூ ரோங்ஜியை நாளை சந்திக்கவிருக்கும் ஜஸ்வந்த் சிங், அந்நாட்டின் துணைப் பிரதமரான கியான்கிச்சனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக பெய்ஜிங்-டெல்லி நேரடி விமானப் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கியது. பெய்ஜிங்கிலிருந்துமுதல் நேரடி விமானம் நேற்று டெல்லி வந்து சேர்ந்தது.












Click it and Unblock the Notifications