தமிழ்ப் புத்தாண்டு முதல் தூத்துக்குடி-பெங்களூர் புதிய விரைவு பஸ்
தூத்துக்குடி:
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு புதிய அரசு விரைவு பஸ்கள்இயக்கப்படுகின்றன.
கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித் தடங்களில் அதி நவீனசின்னத்திரையுடன் கூடிய புதிய சொகுசு விரைவு பஸ்கள் தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படுகின்றன.
அதன்படி தூத்துக்குடியிலிருந்து தினமும் மாலை 6 மணிக்கு விரைவு பஸ் கிளம்பி மறுநாள் காலை 7.30 மணிக்குபெங்களூர் சென்றடையும். இதற்கான பயணக் கட்டணம் ரூ.239 ஆகும்.
இதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் இரண்டுபஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த இரண்டு பஸ்களில் சாதாரண பஸ் தினமும் பகல் 12 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி மாலை 5மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதற்குக் கட்டணம் ரூ.61.
மற்றொன்றான சொகுசு பஸ் இரவு 11.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் செல்லும்.இதற்கான கட்டணம் ரூ.77 ஆகும்.












Click it and Unblock the Notifications