ஜெயாவின் செயலால் இலங்கை அமைதி முயற்சி குலையலாம் - கருணாநிதி கவலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும்என்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை தடைபடலாம்என்று திமுக தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

பிரபாகரனைப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்றும் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்தும் நாளை(செவ்வாய்க்கிழமை) தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று சமீபத்தில் தமிழக முதல்வர்ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதுகுறித்து நேற்று சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அமைதி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டிலேயே பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு,இலங்கை அரசுடன் பேச்சு நடத்தியது. தற்போது இன்டர்போல் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

முன்பு பிரேமதாசா மற்றும் சந்திரிகா ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதே பிரபாகரனைப் பிடித்துக் கொண்டுவரமுடியவில்லை. இப்போது அவருடன் மிகவும் நேசமாக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அமைதிக்கானமுயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டுவரவுள்ள இந்தத் தீர்மானத்தினால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படுமோஎன்று சந்தேகம் எழுந்துள்ளது.

சமாதான சூழ்நிலைக்கு இந்தத் தீர்மானம் சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பதைசெவ்வாய்க்கிழமை சொல்வோம் என்றார் கருணாநிதி.

செவ்வாய்க்கிழமை சட்டசபைக்குச் செல்வீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதை இப்போது சொல்ல முடியாதுஎன்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+