204 படிகளை ஒன்றரை நிமிடத்தில் தலைகீழாக க(ந)டந்து சாதனை!!
ஸ்ரீவில்லிபுத்தூர்:
204 கோவில் படிகளை ஒன்றரை நிமிடத்தில் தலைகீழாக நடந்து சாதனை புரிந்துள்ளார் ராஜபாளையம் இளைஞர்.
நீராத்திலிங்கம் என்ற அந்த இளைஞர் உலகைக் கவர வேண்டும் என்பதற்காக இந்தச் சோதனையான சாதனையைமேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வெங்கடேசப் பெருமாள் கோவிலின் மலையிலிருந்து படிகள் மூலம்தலைகீழாகவே வர முடிவு செய்தார்.
மொத்தம் 204 படிகள் கொண்ட இந்த மலைக் கோவிலின் மேலே உள்ள முதலாவது படியிலிருந்து தன்னுடையகால்களை மேலே அந்தரத்தில் நிறுத்தி, தலைகீழாகக் கவிழ்ந்து கொண்டு கைகளாலேயே நடக்க ஆரம்பித்தார்.
அவர் மளமளவென்று கீழே தலைகீழாகவே இறங்கிய வேகத்தைப் பார்த்து கூடியிருந்த மக்களும் நீராத்திலிங்கத்தைஉற்சாகப்படுத்தினர்.
இதனால் சுறுசுறுப்படைந்த நீராத்திலிங்கம், மேலும் வேகமாகக் கைகளால் படிகளில் கீழிறங்க ஆரம்பித்தார்.
இதனால் ஒன்றரை நிமிடத்திலேயே அவரால் 204 படிகளையும் கடக்க முடிந்தது.
இந்தச் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கு அவர் விண்ணப்பிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications