யாழ்ப்பாணத்தில் புலிகளின் அலுவலகம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் தங்களுடைய அரசியல் அலுவலகத்தைத் திறந்துள்ளனர்.
வேத மந்திரங்கள் முழங்க இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஏற்பட்ட நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் புலிகள் தங்களுடைய அரசியல் அலுவலகங்களைப் படிப்படியாக திறந்து கொண்டே வருகின்றனர்.
அதன்படி யாழ்ப்பாணத்தில் புலிகளின் அரசியல் அலுவலகம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை, கடந்த 1995 டிசம்பர் மாதம் இலங்கைராணுவம் கைப்பற்றியது.












Click it and Unblock the Notifications