பிரபாகரனுக்கு எதிரான தீர்மானம்: ஜெ.க்கு நெடுமாறன் கண்டனம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழர் தேசிய இயக்கத்தின்தலைவரான பழ. நெடுமாறன் கண்டித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படவிருக்கும் சூழ்நிலையில் அதைக் கெடுக்கும் விதத்தில்நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் உலகத் தமிழர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதுஎன்றும் நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இலங்கை அதிபர் சந்திரிகாவுக்குத் துணை போயுள்ளார் ஜெயலலிதா. இந்தத் தீர்மானம் தமிழர்களுக்கு பெரும்தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் என்ற உணர்வுடன் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புச் செய்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட்கட்சியினரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் நடுநிலை என்ற பெயரில் திமுக நழுவியுள்ளதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். வரலாற்றில்படிந்து விட்ட கறையாகும் இது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications