போலீஸ் அதிகாரியை தாக்கிய மாஜி அதிமுக எம்.எல்.ஏவுக்கு 6 மாதம் சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
கடந்த 1995ல் ராஜபாளையத்தில் நடந்த பேரணியின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்புவீரர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான தனுஷ்கோடி உள்பட 16பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 1995ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நடந்த ஊர்வலம் பெரும்வன்முறையாக வெடித்தது.
தற்போது திமுகவில் உள்ள தனுஷ்கோடியும் அவருடைய ஆதரவாளர்களும் சேர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்சிதம்பரம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் லூகாஸ், ராமர் மற்றும் நித்திரைப்பாண்டி ஆகியோரைப் பயங்கரமாகத்தாக்கினர்.
மேலும் போலீஸ் ஜீப் மற்றும் தீயணைப்பு வண்டி ஆகியவற்றையும் தனுஷ்கோடி தலைமையிலான கும்பல் அடித்துநொறுக்கியது.
இச்சம்பவங்கள் தொடர்பாக தனுஷ்கோடி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மீதானவிசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண ராஜா நேற்று (புதன்கிழமை) மாலை தனுஷ்கோடி உள்ளிட்ட 16 பேருக்கும்ஆறு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான லிங்கம் என்பவருக்கு ஓராண்டு தண்டனை வழங்கியும் நீதிபதிகிருஷ்ண ராஜா தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications