"கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக நினைக்கலாமா?"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

""லோக்கல் திருடன் சந்தனக் கடத்தல் வீரப்பனையே பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடல் கடந்து போய்விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிக்க ஜெயலலிதா நினைப்பது கேலிக்கூத்தாகஉள்ளது"" என்று தமிழக தேசியவாத காங்கிரசின் தலைவரான ஜி.பி. சாரதி கூறியுள்ளார்.

இதுகுறித்து சாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜிவ் காந்தி வெறும் பிரதமராக மட்டும் இருந்ததில்லை. அவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். ஆனால்காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட எந்த மாநில சட்டசபையிலும் பிரபாகரனை ஒப்படைக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்தில் மட்டும் அவசரக் கோலத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக விரித்தவலையில் காங்கிரசும், தமாகாவும் விழுந்து விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் மூலம் இலங்கைத் தமிழர்களின் கனவாகவே இருந்து வரும்அமைதித் தீர்வு என்பது பாதிக்கப்படும்.

கன்னட நடிகர் ராஜ்குமாரைக் காட்டுக்குள் கொண்டு போய் வைத்திருந்த வீரப்பனைப் பிடித்துக் காட்டுவோம் என்றுஜெயலலிதா சவால் விட்டார். இப்போது அவர்களது ஆட்சிதான் நடக்கிறது. தேடுதல் வேட்டையும் நடக்கிறது,ஆயினும் வீரப்பனைப் பிடிக்கும் வழியைத்தான் காணோம்.

இந்த நிலையில் பிரபாகரனை பிடிக்க நினைப்பது, "கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறிவைகுண்டம் போக நினைத்த" கதையாக உள்ளது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சாரதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+