ஓமன்: பஸ் கவிழ்ந்து 39 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஓமன் நாட்டில் ஒரு பஸ் தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் 39 இந்தியர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் இறந்த இந்தியர்களில் 12 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பஞ்சாபியர்கள். மற்றொருவர்கேரளாவைச் சேர்ந்த சுதர்சனம் என்பவராவார்.
அல் நாஹ்தா அல் ஓமேனியா என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அந்த பஸ், சலாலா என்ற நகரின் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக 30 மீட்டர் ஆழமுள்ள அதலபாதாளத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று நடந்த இந்த விபத்தில் இறந்தவர்களில் மூன்று பாகிஸ்தானியர்களும், நான்கு ஓமன் நாட்டைச்சேர்ந்தவர்களும் அடக்கம்.
சலாலா நகருக்கு அவர்கள் அனைவருமே ஷாப்பிங் செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோதுதான் இந்தக்கொடிய விபத்து நேரிட்டது.












Click it and Unblock the Notifications