குஜராத்தில் மீண்டும் வெடித்த வன்முறைக்கு 2 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத்தில் நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
கடந்த இரண்டு மாதங்களாக குஜராத்தில் தாண்டவமாடும் வன்முறைக்கு ஆயிரத்துக்ம் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர்.
வன்முறை தொடர்பாக இம்மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்தவாரம் ஐந்து நாட்களிலும் எதிர்க் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தைச் செயல்பட விடாமல் தடுத்து விட்டனர்.
இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டேதான் உள்ளன.
கேதா மாவட்டத்திலுள்ள மேம்தாபாத் நகரில் நேற்றிரவு திடீரென வன்முறை வெடித்தது. இந்நகரில் உள்ள சிலவீடுகளுக்கும் கடைகளுக்கும் ஒரு வன்முறைக் கும்பல் தீவைத்தது.
இதையடுத்து அந்த வன்முறைக் கலைப்பதற்காகப் போலீசார் முதலில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.பின்னர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இதேபோல் அகமதாபாத்தில் உள்ள கோமதிப்பூரிலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இவ்விரண்டு நகர்களிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.