ஒமர் அப்துல்லா ராஜினாமா?
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்ராஜினாமா செய்ததையடுத்து, வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லாவும் ராஜினாமா செய்ய முன்வந்தள்ளார்.
ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, லோக்சபாவில் இன்று நடைபெறும் விவாதத்தைத் தொடர்ந்தஓட்டெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
ஆளும் கட்சியை ஆதரித்து ஓட்டளிக்க நாங்கள் முன் வராதபோது, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் எப்படிஅமைச்சராக இருக்க முடியும் என்று கூறிய தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பியான அலி முகம்மது நாயக், ஒமர்ராஜினாமா செய்ய விரும்புவது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் கூறியுள்ளோம் என்றார்.
ஆனால் ஒமரின் ராஜினாமா வாஜ்பாயால் ஏற்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது குறித்து இன்னும்அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
ஐந்து எம்.பிக்களைக் கொண்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, குஜராத் வன்முறை தொடர்பாக அம்மாநில அரசுஎடுத்து வரும் நடவடிக்கைகளில் தங்களுக்குத் திருப்தி இல்லாததால் இந்த ஓட்டெடுப்பில் நடுநிலை வகிக்க முடிவுசெய்துள்ளது.