For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசி நிமிடத்தில் முடிவு: நாயுடு

By A K Khan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடியஓட்டெடுப்பில் யாருக்கு ஓட்டளிப்பது என்பது குறித்து கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று தெரிவித்தார்.

28 எம்.பிக்களைக் கொண்டுள்ள தெலுங்கு தேசம், தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோஓட்டளிப்பது குறித்து இன்னும் எந்தவிதமான தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் இன்று ஓட்டெடுப்பு நடக்கவுள்ள சூழ்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் விவகாரக்குழு இன்று காலை அவசரமாகக் கூடியது.

ஆந்திர முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் அவருடைய இல்லத்தில் இன்றுகாலை சுமார் ஒரு மணி நேரம் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில்,நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள விவாதத்தின் போது வாஜ்பாய் அளிக்கவுள்ள பதிலைப் பொறுத்தே தெலுங்குதேசம் ஓட்டளிக்கும் என்று அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

குஜராத் வன்முறைகளுக்குக் காரணமான அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்றஎங்களுடைய நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் எங்களுடைய கோரிக்கைகளுக்கு வாஜ்பாய்தகுந்த பதில் அளிப்பதைப் பொறுத்தே எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்று தெலுங்கு தேசம்கட்சியின் மூத்த தலைவரான தேவேந்திர கவுடா தெரிவித்தார்.

லோக் ஜன சக்தியின் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி கடைசி நேரத்தில்தான் ஓட்டளிப்பது குறித்துமுடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X