ஜெ.-சசியை விசாரித்த 3 தனி நீதிமன்ற நீதிபதிகள் விடுவிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் 3 தனிநீதிமன்றங்களின் நீதிபதிகளும் அந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் நெல்லை மாவட்ட நீதிபதியாகவும், இரண்டாவதுதனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் நாமக்கல் மாவட்ட நீதிபதியாகவும் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து 3வது தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த நீதிபதி அன்பழகன், முதலாவது கோர்ட்டுக்குமாற்றப்பட்டார்.
அதேபோல் 2வது தனி நீதிமன்றத்திற்கு நீதிபதி ராஜமாணிக்கமும், 3வது தனி நீதிமன்றத்திற்கு நீதிபதிபொன்னுச்சாமியும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் மற்றும் நீதிபதி தார்வேஷ் ஆகியோர் நேற்று(செவ்வாய்க்கிழமை) தங்களது பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து நீதிபதி அன்பழகன் முதலாவது தனி நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்ற இரண்டு நீதிமன்ற நீதிபதிகளும் மே 2ம் தேதி பொறுப்பேற்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications