உணர்ச்சி வசப்பட்டு பதிலளித்த வாஜ்பாய்
டெல்லி:
குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குபதிலளித்தபோது, பிரதமர் வாஜ்பாய் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
குஜராத் பிரச்சனை குறித்துப் பேசியதை விட, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் வாஜ்பாயையும்தான்எதிர்க் கட்சி எம்.பிக்கள் விவாதத்தின்போது அதிகமாக வசை பாடினர்.
இந்த விவகாரம் தொடர்பாக தான் குஜராத்தில் ஒன்றும் கோவாவில் ஒன்றும் பேசியதாக காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி கூறியதை வாஜ்பாய் வன்மையாக மறுத்தார். குஜராத்தில் நான் என்ன பேசினேனோஅதையேதான் கோவாவில் நடந்த பாஜக கூட்டத்திலும் பேசினேன் என்றார் வாஜ்பாய்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு குஜராத் பிரச்சனையை மத்திய அரசு கையாள வேண்டும் என்று சோனியாகுறிப்பிட்டிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்தை மதிக்கிறேன். ஆனால் எங்களுடைய பாஜக மட்டுமல்ல, நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும் என்றுவாஜ்பாய் பதிலளித்தார்.
தன்னுடைய பதிலுரையின்போது, மீடியாவையும் வாஜ்பாய் கடுமையாகச் சாடினார். குஜராத் வன்முறைக்காட்சிகளையும் எரிந்துபோன உடல்களையும் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியதைக் கண்டித்தஅவர், இவ்வாறு ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
வன்முறையின்போது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட செய்திகளை பத்திரிக்கைகள் அழுத்தம்திருத்தமாகச் சொல்வதால்தான் மதக் கலவரம் மேலும் அதிகமாக வெடிக்கிறது என்றார் வாஜ்பாய்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு ரூ.150 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தன்னுடையபதிலுரையின்போது வாஜ்பாய் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications