தீப்பெட்டி லாரி தீப்பிடித்து எரிந்தது: ரூ.10 லட்சம் சேதம்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டேங்கர் லாரி மோதியதில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகளை ஏற்றிவந்த லாரி தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
சிவகாசியிலிருந்து ஒரு லாரி ரூ.10 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தீப்பெட்டிலாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் தீப்பெட்டி லாரி திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.
தீப்பெட்டி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், லாரியிலிருந்து கீழே விழுந்தஏராளமான தீப்பெட்டி பண்டல்களை அள்ளிக் கொண்டு ஓடினர். எரியும் லாரியை தண்ணீர் ஊற்றி அணைப்பதுகுறித்து கொஞ்சம்கூட யோசிக்காமல் சிரித்துக் கொண்டே அம்மக்கள் எரியும் லாரியிலிருந்து தீப்பெட்டியைஅள்ளிச் சென்றது வேதனைக்குரியதாக இருந்தது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள்தீப்ட்ெடி லாரி முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.












Click it and Unblock the Notifications