பொள்ளாச்சியில் மதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே மதிமுக பிரமுகர் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இதில் அவருடைய தலை சிதறியது.
பொள்ளாச்சி அருகே உள்ள சுப்பேகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் கருப்புசாமி (37). இவர் மதிமுகவின் மாவட்டபிரதிநிதியாவார்.
அதே பகுதியைச் சேர்ந்த மெய்யாசாமி (33) மற்றும் ஈஸ்வரன்(36) ஆகியோருடன் ஆழியாற்றங்கரையில் உள்ளவிநாயகர் கோவில் அருகே கல்லில் அமர்ந்து நேற்று அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள பழனிச்சாமி, துரையன், சக்திவேல், சக்தி, பிரபு, மாரிமுத்து ஆகியோர் வந்துகருப்புசாமியிடம் தகராறு செய்தனர்.
பின்னர் தகராறு வலுக்கவே கோபமடைந்த எதிர் தரப்பினர் கருப்புசாமியைத் அரிவாளால் வெட்டினர். கூடஇருந்தவர்களையும் தாக்கிய அந்தக் கும்பல், திடீரென்று கருப்புசாமியின் மீது வெடிகுண்டை வீசிவிட்டுத்தப்பியோடினர்.
இந்த வெடிகுண்டு வீச்சில் கருப்புசாமியின் தலை சிதறி, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தாக்கப்பட்டமெய்யாசாமியும், ஈஸ்வரனும் அம்பராம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கருப்புசாமியைக் கொலை செய்தவர்கள், புதிய தமிழகம் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரியின்ஆதரவாளர்கள் என்று கருப்புசாமியின் ஆதரவாளர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications