நகைக் கடைகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நகைக் கடைகளாகக் குறிவைத்துக் கொள்ளையடித்து வந்த 2பேரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தையும்போலீசார் கைப்பற்றினர்.

சமீபகாலமாக சென்னை நகரில் கொள்ளைச் சம்பவங்கள் பெருகி, சென்னை மாநகரம் ஒரு "கொள்ளை"மாநகரமாகவே மாறிவிட்டது. தினந்தோறும் வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் நகைகளையும் பணத்தையும்அள்ளிச் செல்வது சகஜமாகவே போய்விட்டது.

இதற்கிடையே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நகைக் கடைகளாகப் பார்த்துக் குறிவைத்து அவற்றை சிலகொள்ளைக் கும்பல் சூறையாடி வந்தது. பெரும்பாலும் இந்தக் கடைகளின் பின்பக்கம் உள்ள சுவர்களில் ஓட்டைபோட்டு உள்ளே புகுந்தே இந்தக் கும்பல்கள் கொள்ளையடித்து வந்தன.

இந்நிலையில் இந்த நகைக் கடைக் கொள்ளைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படைப் போலீசார் நேற்றுமாலை இரண்டு பேரைக் கைது செய்தனர்.

அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டபோது, சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலானநகைகள் மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையடித்திருப்பதாகத் தெரிய வந்தது.

இதிலிருந்து சுமார் ரூ.22 மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை மட்டும் தற்போது போலீசார் கைப்பற்றியுள்ளனர்.இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், 38 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.13 லட்சம் ரொக்கமும்அடங்கும் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் இன்று நிருபர்களிடம் கூறினார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேர் தவிர மேலும் நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் தொடர் கொள்ளைகள் ஏன் நடக்கின்றன என்று கேட்டால் அதற்கு விடை கூறுவது கடினம் என்றுகூறிய நெய்ல்வால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்தும் நிறையப் பேர் கொள்ளையடிப்பதற்காகவேசென்னைக்கு வருவதாகவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+