இடைத்தேர்தல்: கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷ்னர் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் 3 தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தல் குறித்து அந்தத் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் கலெக்டர்கள், தேர்தல்அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சாரங்கி ஆலோசனை நடத்தினார்.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் மே 31ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.இதற்கான மனு தாக்கல் மே 6ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையர் சாரங்கி தலைமையில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகள் அடங்கிய மாவட்ட கலெக்டர்கள்மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரிகளின் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
இந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவது குறித்துஅதிகாரிகளுக்கு இன்றைய கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவுபடுத்தவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications