For Quick Alerts
For Daily Alerts
Just In
"பிராடு"களுக்கு கிடுக்கிப்பிடி: பா.ஜ.க. வரவேற்பு
நாகர்கோவில்:
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை வாக்காளர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை பாரதீய ஜனதாக் கட்சி வரவேற்றுள்ளது.
நாகர்கோவிலில் கட்சியின் மாநில துணைத் தலைவர் வேலாயுதம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தகைய தீர்ப்பின் மூலம் நியாயமான, நேர்மையானவேட்பாளர்கள் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைவெளியிடுவதற்கு வசதியாக தேர்தல் கமிஷன் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றார் வேலாயுதம்.
Comments
Story first published: Friday, May 3, 2002, 5:30 [IST]